Sunday, July 25, 2010

குருவை மதிக்காத சிஷ்யன்!


பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் குத்திலன் என்ற வீணை வித்வானாக இருந்தார். அவர் தம் பதினாறாவது வயதிலேயே தமக்கு இணையாக யாராலும் வீணை வாசிக்க முடியாது என்பதைக் காட்டி விட்டார். அவரது புகழ் எங்கும் பரவி இருந்தது. இதைக் கண்ட காசி மன்னனும் அவரைத் தன் ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொண்டான்.

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பின் காசியிலிருந்து சில வியாபாரிகள் உஜ்ஜயினி நகருக்குத் தம் தொழில் சம்பந்தமாகச் சென்றனர். அவர்கள் குத்திலனது வீணை வாசிப்பைப் பல முறை கேட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள். உஜ்ஜயினியில் தம் வேலை சற்றுத் தாமதமாகும் என்பதால் சில நாள்கள் தங்கினர். அப்போது ஒரு நாள் இரவு யாரையாவது வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் என அவர்கள் நினைத்தனர். யாராவது நல்ல வீணை வித்வான் இருக்கிறாரா என அவர்கள் விசாரித்த போது, பலர் மாசிலன் என்ற பெயரைக் கூறினார்கள்.

காசி வியாபாரிகள் தம் பொழுது போக்கிற்காக மாசிலனை வீணைக் கச்சேரி செய்ய அழைத்து வந்தார்கள். ஆனால் மாசிலனது வீணை வாசிப்பு அவர்களில் ஒருவரைக் கூட கவரவில்லை. அவர்கள் ரசிக்கவும் இல்லை. இதைக் கண்ட மாசிலன் “நான் இவ்வளவு நேரமாக வீணை வாசித்தது எப்படி இருந்தது?” என்று கேட்டான். அப்போது காசி வியாபாரிகளில் ஒருவன் “நீங்கள் வீணை வாசித்தீர்களா? நீங்கள் சுருதி கூட்டினீர்கள் என்றல்லவா நினைத்தேன்” என்றான்.

அதைக் கேட்ட மாசிலனின் முகம் அவமானத்தால் சுண்டியது. அவன் அவர்களிடம் “அப்படியானால் என்னை விட நன்கு வாசிக்கக் கூடிய வீணை வித்வான் இருக்கிறார் என்று தானே பொருள்” என்று கேட்டான்.


 அப்போது இன்னொருவன் “அப்படியானால் நீங்கள் எங்கள் காசி வீணை வித்வானை பற்றிக் கேள்வி பட்டதில்லையா?” என்று கேட்டான். “அவர் பெரிய வித்வானா?” என்று மாசிலன் கேட்டான். வேறொருவனோ “அவரது வீணை வாசிப்பைக் கேட்ட பின், நீங்கள் வீணையை வாசிப்பதைக் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?” என்றான். அப்போது மாசிலன் “நான் அவருக்குச் சமமாக வீணை வாசித்துக் காட்டி உங்களிடமிருந்த பணம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டாம்” எனக் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

மாசிலன் அன்றே உஜ்ஜயினியை விட்டுக் கிளம்பி காசி நகரை அடைந்தான். அங்கு குத்திலனான போதிசத்வரைக் கண்டு “ஐயா! நான் உஜ்ஜயினியை சார்ந்தவன். தங்களிடம் வீணைப் பயிற்சி பெற வந்திருக்கிறேன். தங்கள் தயவு இருந்தால் தங்களைப் போல வீணை வாசிக்கும் பேறு பெறுவேன்” என்றான். போதிசத்வரும் அவனைத் தம் சீடனாக ஏற்று தினமும் வீணையில் அவனுக்குப் பயிற்சி அளிக்காலானார். மாசிலனும் குத்திலனான போதிசத்வரிடம் நன்கு வீணை கற்கலானான்.

இப்படியாக சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிசத்வர் தம் சீடனிடம் “நீ என்னிடம் கற்க வேண்டியதெல்லாம் கற்றாகி விட்டது. இனி நீ உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார். மாசிலனுக்கோ உஜ்ஜயினிக்குத் திரும்பிப் போக இஷ்டமே இல்லை. காசியிலேயே அரச சபையில் உத்தியோகத்தில் அமர்வது என அவன் தீர்மானித்துக் கொண்டான். அவன் போதிசத்வரிடம் “குருவே! நான் உஜ்ஜயினிக்குப் போக விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நானும் கற்றுக் கொண்டு விட்டதால் உங்களோடு எனக்கும் சமஸ்தானத்தில் வித்வானாக இருக்கும் வேலையை வாங்கிக் கொடுங்கள். நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்”என்றான்.

போதிசத்வரும் மறுநாள் காசி மன்னனிடம் மாசிலனுக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி கேட்டார். மன்னனும் “மாசிலன் உங்கள் சீடன் என்பதற்காகத்தான் நான் அவனை வேலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவனுக்கு உங்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அளவிற்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுப்பதில் பாதிதான் கொடுப்பேன். இதற்கு சம்மதமானால் அவன் இந்த வேலையை ஏற்கட்டும்” என்றான்.



 போதிசத்வரும் வீடு திரும்பி மாசிலனிடம் மன்னன் கூறியதைச் சொன்னார். மாசிலன் அது கேட்டு மனம் வருந்தினான். இது என்ன நியாயம்! ஒரே மாதிரியாக உள்ள இருவரில் ஒருவருக்கு நிறையச் சம்பளம்? மற்றவனுக்கு அதில் பாதியா? மன்னனிடமே இதற்கு விளக்கம் கேட்க எண்ணி அவன் மன்னனைச் சந்தித்தான்.

அப்போது, “அரசே, இப்போது ஆஸ்தான வித்வானாக உள்ளவரின் சம்பளத்தில் பாதி கொடுத்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்ளவதாகக் கூறினீர்களாமே. நான் எந்த விதத்தில் அவரை விடக் குறைந்து போனேன்? அவர் எப்படியெல்லாம் வீணை வாசிக்கிறாரோ அதுபோல என்னாலும் வாசிக்கமுடியும். இது பற்றி என் குருவிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் எனக்கும் அவருக்குக் கொடுக்கும் அளவிற்கு சம்பளம் கொடுங்கள்” என்றான்.

மன்னனுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் “நீ குத்திலரின் சீடன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உனக்கு உத்தியோகம் அளிக்கச் சம்மதித்தேன். நீ அவருக்குச் சமமான வீணை வித்வான் என நான் எப்படி நம்பமுடியும்?” என்று கேட்டான். மாசிலனும் “நீங்கள் எனக்கும் அவருக்கும் போட்டி வைத்துப் பாருங்கள். அப்போது தெரியும்” என்றான். காசி மன்னனும் அதற்கு இணங்கி ஒரு போட்டியை வைத்தான். “நீ இந்தப் போட்டியில் வென்றால் உனக்கு இங்கே உத்தியோகம் கிடைக்கும், தோற்றால் நீ இந்த நாட்டை விட்டே ஓடி விட வேண்டும்” என்றான். மாசிலனும் அதற்கு இணங்கினான்.



மறுநாளே குருவிற்கும் சீடனுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியைக் காண்பதற்காகவும், கேட்பதற்காகவும் ஏராளமானோர் கூடி விட்டார்கள். இருவரும் ஒருவரை மற்றவர் வெல்வதற்காக வீணையை வாசிக்கலானார்கள். சற்று நேரத்திற்குப் பின் போதிசத்வரின் வீணை கம்பிகளில் ஒன்று அறுந்து போகவே அவர் மூன்று கம்பிகளில் வாசிக்கலானார். அவர் ஏதோ புதிதாய் செய்கிறார் என்றெண்ணிய மாசிலன் தன் வீணையின் ஒரு கம்பியை அறுத்து விட்டு அவரைப் போல வாசித்தான்.

 போதிசத்வரின் வீணையில் மேலும் இரு கம்பிகள் அறுந்து போகவே, ஒரே கம்பியில் வாசித்தார். மாசிலனும் அவரைப் பார்த்து தன் வீணைக் கம்பிகளில் இரண்டை அறுத்து விட்டு ஒரே கம்பியில் வாசித்தான். போதிசத்வரின் வீணையின் கடைசி கம்பியும் அறுந்தது. கம்பி இல்லாமலேயே வீணையிலிருந்து அவர் இனிய நாதம் கிளம்பி வரச் செய்தார்.

மாசிலனும் தன் வீணையின் கடைசிக் கம்பியை அறுத்து விட்டு வாசிக்க முயன்றான். ஆனால் அவனது வீணையிலிருந்து எவ்வித நாதமும் வரவில்லை. சபையோர் போதிசத்வரைப் பாராட்டினார்கள். மாசிலனை கேலி செய்தார்கள். குருவின் திறமை தெரியாமல் அவரை போட்டிக்கு இழுத்த மாசிலனுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. அன்றே தன் ஊரான உஜ்ஜயினிக்குக் கிளம்பி விட்டான்.

மானிடப்பிறப்பு


 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் மகத நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து மகத மன்னனின் மாளிகையில் பணியாளராக இருந்து வந்தார். மகத நாட்டிற்கும் அங்க நாட்டிற்கும் மத்தியில் சம்பா நதி ஓடியது. அந்த நதியின் கீழ் நாகலோகம் இருந்தது.
 
அந்த லோகத்தை சம்பேயன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மகதநாடும் அங்கதநாடும் எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தன. ஒரு முறை இரண்டு நாட்டிற்கும் இடையில் நடந்த போரில் மகத மன்னன் தோற்றுத் தன் குதிரை மீது ஏறி ஓடிப்போனான். அவன் சம்பா நதியை அடைந்ததும் தன் குதிரையோடு ஆற்றில் விழுந்தான்.
 
ஆனால் அவன் நீரில் மூழ்கிச் சாகாமல் தன் குதிரையோடு நாகலோகம் போய்ச் சேர்ந்தான். மகத மன்னனை நாகலோக மன்னனான சம்பேயன் வரவேற்றான். அவனை நன்கு உபசரித்து கே்ஷமநலங்கள் பற்றி விசாரிக்கவே மகத மன்னனும் தன் நிலை பற்றிக் கூறினான்.
 
இதைக் கேட்ட நாக மன்னனும் "கவலைப் படாதீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அங்க மன்னனைப் போரில் தோற்கடித்து உங்கள் நாட்டை உங்களுக்கு மீட்டுத் தருகிறேன்" என்றான். அவன் சொன்னபடியே மகத மன்னனுக்கு உதவி புரிந்தான்.
 
போரில் அங்க மன்னன் மடியவே அவனது நாட்டிற்கும் மகத மன்னன் அரசனான். அந்த நிகழ்ச்சிக்கு பின் நாகமன்னன் மகத மன்னனின் ஆருயிர் தோழனாக ஆனான். மகத மன்னன் வருடத்தில் ஒருநாள் தன் பரிவாரங்களோடு சம்பா நதிக் கரைக்குச் செல்வான். 

அன்றே நாகமன்னன் ஆற்றிலிருந்து தன் சுற்றுப் பரிவாரங்களோடு வெளிவந்து மகத மன்னன் அளிக்கும் பரிசுகளை ஏற்றுக் கொள்வான். மகத மன்னனின் பரிவாரத்தில் ஒரு பணியாளாக இருந்த போதிசத்வர் நாக மன்னனின் வைபவத்தைக் கண்ணாரக் கண்டார். அதனால் அவர் இறக்கும் போது அவன் நினைவாகவே இருந்தார். அவர் இறந்த ஏழு நாள்களில் நாக மன்னனும் இறக்கவே போதிசத்வரே அடுத்த நாகமன்னனாகப் பிறந்தார். ஆனால் அவரது உடல் மனித உடலாக இல்லாமல் பாம்பாகவே இருந்தது. இது அவர் மனத்தை உறுத்தியது.
 
அவர் தற்கொலை செய்து கொள்ளலாமா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது தான் சுமனா என்ற அழகிய நாகக் கன்னிகை தன் தோழிகளோடு வந்து அவரை வணங்கினாள். அவளைக் கண்டதும் அவர் தனது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டு விட்டு அவளை மணந்து கொண்டு நாகலோகத்தை நன்கு ஆண்டு வந்தார்.
 
ஆனால் சிறிது நாள்களுக்குப் பின் அவர் மனம் விரதங்கள், உபவாசங்கள், நிஷ்டை போன்றவற்றில் ஈடுபட்டுப் புண்ணியம் அடைய விரும்பியது. எனவே தன் நாகலோகத்தை விட்டு அவர் பூவுலகிற்குப் போகத் தீர்மானித்துக் கொண்டார். அவர் நாகலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்து ஒரு ஒற்றையடிப் பாதை ஓரமாக இருந்த எறும்புப் புற்றைச் சுற்றிப் படுத்துக் கொண்டு "என்னை கருடனோ பாம்பாட்டியோ பிடிக்கக் கூடாதா?" என நினைத்தார்.
 
ஆனால் அவ்விதம் நடப்பதற்கு மாறாக அவ்வழியே வந்தவர்கள் அந்தப் பாம்பை ஒரு தேவதையாகக் கருதி வணங்கி வரலானார்கள். அங்கு அதற்கு ஒரு கோயிலையும் கட்டி வேளாவேளைக்கு அதற்குப் பூஜை செய்ய ஏற்பாடுகளையும் செய்தார்கள். மக்கள் அங்கு வந்து தீராத நோய்கள் தீர வேண்டும் என்றும் தமக்குப் பிள்ளை பிறக்க வேண்டும் என்றும் தாங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.  

நாகமன்னன் அங்கே இருந்து உபவாசம் இருந்து விட்டு மாதத்தில் ஒருநாள் கிருஷ்ண பட்ச அஷ்டமிநாளன்று நாகலோகம் போய் வரலானான். அவ்வாறு நாகமன்னன் நாகலோகத்திற்கு வந்திருந்த போது அவளது மனைவியான சுமனா ஒரு நாள் தன் கணவரிடம் "நீங்கள் எப்போதும் பூலோகத்திலேயே இருக்கிறீர்களே. உங்களுக்கு ஏதாவது ஆபத்து அங்கு நேர்ந்தால் அதை நான் எவ்வாறு அறிவது?" என்று கேட்டாள்.
 
நாக மன்னனும் அவளை ஒரு குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் "நான் காயப் பட்டால் இதன் நீர் கலங்கி விடும். என்னைக் கருடப் என்னைக் கருடப் பட்சி கவர்ந்து சென்றால் இது உறைந்து கட்டியாகி விடும். என்னை பாம்பாட்டியோ மந்திரவாதியோ பிடித்து விட்டால் இதன் நீர் இரத்தம் போல சிவப்பாக ஆகிவிடும்" என்றான்.
 
சில நாள்களாயின. தட்சசீலத்தில் வசீகர மந்திரங்களைக் கற்ற பிராம்மண வாலிபன் ஒருவன் நாகமன்னனின் கோயில் இருந்த இடத்திற்கு வந்தான். புற்றைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்த நாக மன்னனைக் கண்டு பாம்பை வசீகரிக்கும் மந்திரத்தை உச்சரித்து அதனைப் பிடித்து தன்னிடமிருந்த ஒரு பெட்டிக்குள் அடைத்து எடுத்துக் கொண்டான்.
 
அவன் பல ஊர்களுக்குப் போய் அந்தப் பாம்பை ஆடவைத்து வேடிக்கைக் காட்டிப் பணம் சம்பாதித்தவாறே காசி நகரை அடைந்தான். அவன் பாம்பிற்கு ஆகாரமே கொடுக்காததால் அது பட்டினி கிடந்தது. இப்படி ஒரு மாத காலம் இருந்தது. அந்த வாலிபன் அவ்வப்போது தவளைகளைப் பிடித்து வந்து அதன் முன் வைத்து வரலானாள். ஆனால் அப்பாம்பு அவற்றைப் பார்க்கக் கூடவில்லை.
 
அந்த வாலிபனோ பல இடங்களில் அந்தப் பாம்பை ஆட வைத்து வித்தைக் காட்டி வந்தான். அந்தப் பாம்பும் நன்றாக ஆடி பார்ப்பவர்களை மகிழ வைத்து வந்தது. இதனால் அந்தப் பாம்பைப் பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசலானர்.
 
அந்தப் பாம்பின் வித்தையைப் பற்றி காசி மன்னனின் காதிலும் விழுந்தது. அதனால் ஒரு நாள் அந்த வாலிபனை அழைத்து பாம்பை ஆட வைத்து வேடிக்கைக் காட்டச் சொன்னான். இதே சமயம் நாகலோகத்தில் சுமனா தன் கணவன் திரும்பி வராதது கண்டு அவன் காட்டிய குளத்தைப் பார்க்கப் போனாள்.
 அங்கு சென்றதும் அக்குளத்தின் நீர் சிவப்பாக மாறி இருப்பது கண்டு தன் கணவனை யாரோ பிடித்து விட்டார்கள் என அவள் தெரிந்து கொண்டு பூவுலகிற்குப் போய்த் தேடலானாள். அவளுக்கும் காசிநகரில் உள்ள பாம்பு பற்றித் தெரிய வரவே அங்கு அவள் சென்றாள்.
 
அவள் காசி மன்னனின் அரண்மனையை அடைந்தபோது பிராம்மண வாலிபன் தான் பிடித்து வந்த பாம்பை மன்னன் முன் ஆட வைத்து வித்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாம்பு தன் மனைவியைக் கண்டதும் மிகவும் வெட்கப் பட்டுப் பாம்புப் பெட்டிக்குள் போய் புகுந்து கொண்டது.
 
சுமனா மானிடப் பெண் போலாகி காசி மன்னனைக் கண்டு அவனிடம் "அரசே என் கணவரை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்" என வேண்டினாள். இதே சமயம் பாம்பும் பெட்டியிலிருந்து வந்து அரசன் முன் ஒரு அழகான வாலிபனாகி நின்றது.
 
காசி மன்னனும் அந்த நாக தம்பதியைக் கண்டு மகிழ்ந்து அவர்களை ஒரு வாரக் காலத்திற்குத் தன் விருந்தினர்களாக இருக்கச் செய்தான். பின்னர் அவன் தன் பரிவாரங்களோடு அவர்களுடன் நாகலோகத்திற்குச் சென்றான்.
 
நாகலோக வைபவங்களைக் கண்டு காசி மன்னன் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. அவன் நாகமன்னனிடம் "இங்கு இவ்வளவு சுக போகங்களும் வைபவங்களும் இருந்தும் தாங்கள் பாம்பாகி புற்றைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்த காரணம் என்னவோ?" எனக் கேட்டான்.
 
நாகமன்னனும் "இவ்வளவு சுகம் இங்கே இருந்தாலும் பூலோகத்தில் இருந்தால் தான் மறு பிறப்பு அடையாமல் இருப்பதற்கான வழிகாண முடியும். அதற்காகவே நான் அங்கே அவ்வாறு இருந்தேன்" என்றான். அதைக் கேட்ட காசி மன்னன் மிகவும் பரவசப் பட்டான். போதிசத்வரான அந்த நாகமன்னனை வணங்கி அவர் கொடுத்த பரிசுகளை ஏற்றுக் காசிக்குத் திரும்பி வந்தான்.
 

அநீதி அழியும்


பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.

ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினாள்.

போதிசத்வரும் "ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்" எனக் கூறித் தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார். போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள்.

வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார். சுஜாதாவும் கீழே இறங்கி தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு நீர் பருகிச் சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர். அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான்.

மக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சுஜாதாவும் தானும் சற்று வேடிக்கை பார்த்து விட்டு வருவதாக தன் கணவரிடம் கூறி அவரது அனுமதி பெற்று கீழே இறங்கி ஒரு ஓரமாக நின்றாள்.  வண்டியிலுள்ள போதே காசி மன்னன் சுஜாதாவைப் பார்த்து அவளது அழகில் மயங்கி விட்டான். அவளை அடைந்து விடுவது என எண்ணிய போது அவள் விவாகமானவள் என்றும் அவளது கணவன் வண்டியிலுள்ள போதிசத்வர் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.

போதிசத்வரை எப்படியாவது ஒழித்து விட்டால் அந்த அழகிய பெண் தன்னோடு இருந்து விடுவாள் என அவன் எண்ணி அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான். சட்டென ஒரு வழி அவனுக்குப் புலப்பட்டது. அவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு வேலையாளை அழைத்து தன் தலையிலிருந்து கிŽடத்தை எடுத்து அவனிடம் கொடுத்து "நீ இதை அதோ தெரியும் வண்டியில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு வா" எனக் கூறி போதிசத்வரின் வண்டியைக் காட்டி அனுப்பினான்.

அந்த வேலையாளும் போதிசத்வர் பாராது இருந்த சமயத்தில் அரசனது கிŽடத்தை அவரது வண்டிக்குள் வைத்து விட்டான். இதற்குள் சுஜாதா அரசன் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டு வெட்கப்பட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள்.



சற்று நேரத்திற்கெல்லாம் அரசாங்க வீரன் ஒருவன் "யாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீர்கள் நம் அரசரின் கிŽடம் திருடுபோய் விட்டது. எல்லாரையும் சோதனை போடப் போகிறோம்" என அறிவித்தான். வீரர்கள் பலர் சோதனையைப் போட்டனர். ஒரு வீரன் போதிசத்வரின் வண்டியைச் சோதனை போட்டு அதில் முன்பே ஒளித்து வைக்கப்பட்டிருந்த கிŽடத்தை எடுத்து "இதோ திருடன். கிŽடம் அகப்பட்டு விட்டது" எனக் கத்தினான். அரசனும் போதிசத்வர்தான் திருடன் எனக் கூறி அவரது தலையை வெட்டி எறியுமாறு தண்டனை அளித்தான். வீரர்கள் போதிசத்வரைப் பிடித்து சவுக்கால் அடித்து பல தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு கொலைக்களத்திற்குக் கொண்டு போகலாயினர்.


இதைக் கண்ட சுஜாதா அவர் பின்னாலேயே ஓடிக் கண்ணீர் வடித்தவாறே "ஐயோ! நீங்கள் இப்படி அவமானப்பட நான்தான் காரணம். இது எனக்குத் தெரிந்து விட்டது. இந்த அநீதி அடுக்குமா? கடவுளே! என் முறையீட்டைக் கேளாயோ" எனக் கதறினாள். சுஜாதாவின் இந்தப் புலம்பல் தேவலோகத்தையே ஆட்டி உலுக்கியது. தேவேந்திரனும் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு தன் சக்தியால் போதிசத்வரை அரசன் இருந்த இடத்தில் அவனது ஆடையிலும் காசி மன்னனை போதிசத்வர் இருந்த இடத்தில் அவரது ஆடைகளைஅணிந்து இருக்கும்படியும் மாற்றம் செய்து விட்டான்.

வீரர்களுக்குத் தாம் பிடித்துச் செல்வது தம் மன்னனைத்தான் என்பது தெரியவில்லை. கொலைக்களத்தில் அரசனின் தலை துண்டிக்கப்பட்ட போதுதான் உண்மை தெரிந்தது. மன்னனின் ஆடைகள் திரும்ப அவனது உடலுக்கு வந்தன. போதிசத்வரின் ஆடைகள் அவரிடமே போய் விட்டன. தம் கொடுங்கோல் மன்னன் ஒழிந்தான் என்பது கண்டு காசி மக்கள் மகிழ்ந்து போய் ஆரவாரம் செய்தனர். இதற்குக் காரணமான போதிசத்வரைக் காண எல்லாரும் கூடி விட்டனர்.

அப்போது தேவேந்திரன் அவர்கள் முன் தோன்றி நடந்ததை எல்லாம் கூறி காசி மன்னன் தன் கெட்ட எண்ணத்தாலேயே அழிந்தான் என்றும் இனி காசியை போதிசத்வரே ஆண்டு வருவார் என்றும் சுஜாதா அவரது பட்டத்து ராணியாக இருப்பாள் எனவும் கூறி எல்லாரையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தான். மக்களும் போதிசத்வரைத் தம் மன்னராக ஏற்று அவரது ஆட்சியில் சுக வாழ்வு வாழ்ந்தனர். போதிசத்வரும் சுஜாதாவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து நேடுங்காலம் ஆட்சி புரிந்து மக்களை சுகமாக இருக்கச் செய்தார்.

அநீதி அழியும்


பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.

ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினாள்.

போதிசத்வரும் "ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்" எனக் கூறித் தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார். போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள்.

வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார். சுஜாதாவும் கீழே இறங்கி தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு நீர் பருகிச் சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர். அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான்.

அடுத்தவரை குறை கூறும் முன்...

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும்  இறைக்கு


விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”

 இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர் நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது, தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன் ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.

உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட, ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.
மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத் திட்டமிட்டிருந்தேன். விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை பாடினான்.

fgfg

fgfg

Sunday, July 4, 2010

எறும்பு எக்ஸ்பிரஸ்!

எறும்பு எக்ஸ்பிரஸ்!


அந்த ரயில் எங்குமே நிற்காது... புற்றிலிருந்து கிளம்பினால் நேரே உணவு இருக்கும் இடம் எவ்வளவு தூரமென்றாலும் சரி 'கூ..கூ... சிக்கு... புக்கு.... சூப்பர்ஃபாஸ்ட்... உணவை தேடி கண்டுபிடித்து... பிறகு உணவை எடுத்து கொண்டு மீண்டும் புற்றை நோக்கி திரும்பும் எறும்பு எக்ஸ்பிரஸ்!

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் அதே தான் என்ன ஒரு வேகம்..! வழியில் யாராவது குறுக்கே போனால்... அவ்வளவுதான் சிக்கு... புக்கு... உடம்பெல்லாம் ஊசி போட்டு பிடுங்கிவிடும்.







அன்று அந்த எறும்பு எக்ஸ்பிரஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. "சீக்கிரம், ம்..." ராணியாரின் கட்டளைக்குரல் கேட்டுகொண்டே இருந்தது.





"மழைக்காலம் நெருங்கிவிட்டது. இன்னும் புற்றில் நிறைய வேலைகள் இருக்கிறது" என்று பரபரத்து கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு தானிய அறைகள் நிரம்பி இருந்தாலும் மேலும் மேலும் எறும்பு எக்ஸ்பிரஸில் உணவுகள் கொண்டு வரப்பட்டு அறைகள் அனைத்தும் தொடர்ந்து நிரப்பப்பட்டு கொண்டேயிருந்தன. பரபரப்புடன் எறும்புகள் இயங்கி கொண்டிருந்தன. அப்போது ஒரு ஜூனியர் எறும்பு மட்டும் ராணியாரை நோக்கி ஒரு கேள்வியுடன் சென்றது.



"மன்னிக்க வேண்டும் ராணியாரே! உங்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை" என்றது.



தன் முன் நின்று கொண்டிருந்த ஜூனியர் எறும்பை பார்த்த ராணியார் புன்னகைத்தார்...



"மம்... என்ன?" ஆனால் குரலில் மட்டும் கொஞ்சம் கடுமை.



"ராணியார் அவர்களே, ஏற்கெனவே புற்றில் எக்கச்சக்கமாக உணவு கையிருப்பாக இருக்கிறது..." என்றது பேச்சை இழுத்தது ஜூனியர் எறும்பு.



"அது எனக்கும் தெரியும்... அதிகப் பிரசங்கி..." என்று ஆரம்பத்திலேயே குட்டு வைத்தார் ராணியார்.



"இ... இல்லை... மன்னிச்சுடுங்க" என்று ஜூனியர் சமாளிப்பதற்குள், அங்கு மற்ற ஜுனியர் எறும்புகளின் கூட்டமே கூடிவிட்டதையும் ராணியார் கவனிக்க தவறவில்லை.



"ஏன் மேலும் மேலும் தானிய உணவு வந்துகொண்டே இருக்கவேண்டும்... கொஞ்சம் 'ரெஸ்ட்’ எடுக்கலாமே. நாங்க விளையாடக்கூட அனுமதிக்கப் படுவது இல்லை. எங்க அப்பா அம்மாவுக்கு எக்ஸ்பிரஸ் ஓட்ட உதவி செய்தே பொழுதுபோய்விடுகிறது..." என்று கேள்வியை ஒரு வழியாக கேட்டே விட்டது அந்த ஜூனியர் எறும்பு.



"இருப்பதை சாப்பிட்டுவிட்டு பிறகு மறுபடியும் உணவு தேடலாமே?" இது இன்னொரு ஜூனியரின் தைரியக்குரல்.



"அன்பு எறும்புக்குழந்தைகளே..." ராணியார் பரிவுடன் பேசத் தொடங்கினார்.



"நாம் எறும்பு இனத்தை சேர்ந்தவர்கள். மனிதர்களுக்கே சுறுசுறுப்பை கற்றுக்கொடுத் தவர்கள் நாம்தான். உழைக்கும் நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்... அப்போதுதான் ஓய்வுநேரத்தில் நிம்மதியாக இருக்க முடியும். உங்களுக்கு விளக்கமாக ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பித்தது ராணியார்கள். ஜூனியர் எறும்புகளும் கதை கேட்க தயாராகின.



"ஒரு காலத்தில் நம் எறும்பு ராஜாவை பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்தது.



'நான் ஜாலியாக இருக்கிறேன்.ஆனால், நீ மட்டும் எப்போது பார்த்தாலும் உழைத்து கொண்டே இருக்கிறாய். உனக்கே இது அசிங்கமாக இல்லையா..." என்று கூறி பரிகாசித்தது. ஆனால் அதை பொருட் படுத்தாமல் நம் எறும்பு ராஜா உழைத்து உழைத்து புற்றில் உணவு சேர்த்து கொண்டேயிருந்தார்.



ஒருநாள் கடும் மழை பெய்தது. குளிரும் அடித்தது. இதனால் வெட்டுக்கிளி மிகவும் அவதிப்பட்டது. நம் எறும்பு ராஜாவிடம் வந்து, "எறும்பு ராஜா, கொஞ்சம் வெளியே வாருங்கள்" என்று அழைத்தது. வெளியில் வந்த எறும்பு ராஜா, "ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோருமே உழைப்பாளிகள்தான்" என்றது.



"வெளியில் பயங்கர மழையாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நான்கு நாட்களாக நான் பட்டினி... ஆமாம், நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?!" என்றது வெட்டுக்கிளி.



"மழைக்காலத்துக்கு முன்பு உழைத்து சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன்" என்றது எறும்பு ராஜா. எறும்பு கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு வெட்டுக்கிளி எவ்வளவோ கெஞ்சியது. ஆனால், எறும்பு ராஜா மறுத்துவிட்டார்.



இந்த கதையை தான் மனிதர்கள் பள்ளியிலும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்" என்று கதை சொல்லி முடித்தது ராணியார். வேறு எதுவும் பேசாமல் ஜூனியர் எறும்புகள் எக்ஸ்பிரஸ் ரயிலை வேகமாக விரட்டி சென்றன