Sunday, July 25, 2010

அடுத்தவரை குறை கூறும் முன்...

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும்  இறைக்கு


விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”

 இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர் நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது, தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன் ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.

உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட, ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.
மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத் திட்டமிட்டிருந்தேன். விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை பாடினான்.

No comments:

Post a Comment